Wednesday, May 30, 2012

கள்ளக் காதலை டைரக்டர் நியாயப் படுத்துகிறாரா?

தாய்மண் திரையரங்கம்  தயாரிக்கும் படம் 'மயங்கினேன் தயங்கினேன்'.  இப்படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார் இயக்குனர் எஸ் டி வேந்தன்.  இப்படத்தில் நிதின் சத்யா, தருண் ஷத்ரியா, கஞ்சாகருப்பு, புதுமுகம் பாலா, தேஜாஸ்ரீ, அஜெய் ரதன்ம், சஞ்சனா சிங் உட்பட பலர் நடிக்கிறார்கள்.' படம் பற்றி இயக்குனர் எஸ்.டி. வேந்தனிடம் கேட்ட போது....

வாழ்க்கையில் எந்தவித கவலையும் இன்றி வாழக்கூடிய நான்கு நண்பர்கள் நிதின் சத்யா, தருண் ஷத்ரியா, கஞ்சா கருப்பு, பாலா. இந்த நால்வருக்கும் ஒரு விநோதமான பழக்கம் உண்டு. அதாவது வீட்டுக்கு வீடு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் கஞ்சா கருப்பு. பூட்டிக் கிடக்கும் வீட்டை நோட்டமிட்டு விட்டு தன் நண்பர்களிடம்  சொல்லுவார். அவர்கள் அந்த வீட்டுக்குள் புகுந்து, சமையலறைக்குள் நுழைந்து, சமையல் செய்து, திவ்யமாக சாப்பிட்டுவிட்டு, ஒரு குட்டித்தூக்கம் போட்டு விட்டு கிளம்பிவிடுவார்கள். இப்படியாக ஒவ்வொரு வீடாக தங்களின் நூதன சமையல் கை வரிசையை காட்டி வருகிறார்கள்.

ஒரு நாள் பூட்டி கிடக்கும் வீட்டுக்குள் புகுந்து விடுகிறார் தருண் ஷத்ரியா, அங்கு ஒரு இளம் பெண் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அந்தப் பெண்ணிடம் வசமாக மாட்டிக் கொள்ள போகிறோம் என்று தருண் ஷத்ரியா தப்பியோட நினைக்கிறார். அதற்குள் அந்தப் பெண் கண்ணீரோடு வந்து நின்று தன்னை காப்பாற்றுமாறு கேட்கிறாள். திகைத்து போகும் தருண் ஷத்ரியா அவளின் கதையை கேட்கிறார். போலீஸ் அதிகாரியின் மனைவி நான். என்னை என் கணவர் நம்பாமல் வீட்டுக்குள்ளே வைத்து பூட்டி விட்டு போய் விடுகிறார் என்று கதறுகிறாள். அவளின் சோக கதை இவனது மனதை இளக வைக்கிறது. நட்பாக பழகும் இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது.இருவரும் ஒரு நாள் படுக்கை அறையில் உல்லாசமாக இருக்கிறார்கள் இந்த காட்சி ஓவராக இருக்கிறது என்று சென்சாரில் கட் கொடுத்திருக்கிறார்கள்.

இதில் போலீஸ் அதிகாரியாக அஜெய் ரத்தினமும், அவரது மனைவியாக தேஜாஸ்ரீயும் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் இன்னொரு சமூக விஷயத்தை சொல்லி உள்ளேன். மனநல காப்பகங்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் மோசடிகளை அப்படியே தோலுரித்து காட்டியுள்ளேன்."என்று கூறினார்.
இந்த படத்துக்கு 100 கட் கொடுத்திருக்கிறார்கள்.இது போதாது என்று தான் சொல்ல வேண்டும்.
போலீஸ் காரர் மனைவி திருடனுடன் கள்ளக் காதல் கொள்வதை டைரக்டர்  நியாப் படுத்துகிறாரா?

படுக்கையறைக் காட்சியில் தேஜாஸ்ரீ


"நான் கொடுத்த விருந்துக்கும் ஐ.பி.எல் போட்டிக்கும் சம்மந்தமில்லை" -பிரபுதேவா

பிரபுதேவா, தற்போது இந்தியில் இயக்கி வரும் 'ரவுடி ரத்தோர்' படத்திற்காக சென்னையில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த விருந்தில் ஐ.பி.எல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கானும் கலந்துகொண்டார். ஐ.பி.எல் இறுதிப் போட்டி நடந்த தினத்தன்று இந்த விருந்து நடைபெற்றதால், சென்னை அணியை வென்ற கொல்கத்தாவுக்கு பிரபுதேவா விருந்து வைப்பதா? என்று பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்ட அறிக்கையில், "பிரபுதேவா ரவுடி ரத்தோர் படக்குழுவினரின் விருந்து என்ற பெயரில் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் வென்ற கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கானுக்கும் அந்த அணியை ஆதரித்த மும்பை நடிகர், நடிகைகளுக்கும் சென்னையில் விருந்து கொடுத்து குதூகலித்தது வேதனை அளிக்கிறது.

பிரபுதேவா வாழ்ந்தது வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில். இங்குள்ள ரசிகர்களால்தான் பிரபலமானார். இந்திப் படம் இயக்கப் போனதும் மாறிவிட்டார். இந்தி நடிகர்கள் தான் அவருக்கு பெரிதாக தெரிகிறார்கள். சென்னை அணி தோற்றதும் விருந்தையே ரத்து செய்து இருக்க வேண்டும். அல்லது கொல்கத்தா அணியினரை அழைக்காமல் விட்டு இருக்க வேண்டும். அதை செய்யாமல் விட்டது தமிழர்களுக்கு எதிரானதாகவே கருதப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் பிரபுதேவா தரப்பில் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்கள். ரவுடி ரத்தோர் படக்குழுவினர் சார்பில் தமிழ், இந்தி நடிகர், நடிகைகளுக்கு இந்த விருந்து கொடுக்கப்பட்டது. அப்படத்தில் நடித்த அக்ஷய்குமார், சோனாக்சி பங்கேற்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளும் பங்கேற்றனர். விருந்து நடந்த அன்று யதேச்சையாக கொல்கத்தா அணி வென்றுள்ளது. அதற்கும் விருந்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.